Skip to main content

பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி தேர்ந்து எடுப்பது? How to choose the right stocks in Share Market?

 


பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் முதலில் நிறுவனங்களையும் அதன் பிறகு,  தொழில் பிரிவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் பிரிவுகளை பற்றி முதலில் பார்ப்போம். பங்குச்சந்தையில் Nifty, Bank Nifty, Nifty IT, Nifty Pharma  என்று முக்கிய பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முன்னணி நிறுவனங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த நிறுவனங்கள் பற்றி Balance Sheet , P/L, Market Cap அதன் எதிர்கால மதிப்பீடு போன்றவற்றை தெறிந்து கொள்ள வேண்டும்.  பின்பு அதன் வளர்ச்சி விகிதம் மற்றும் வளர்ச்சி காலஅளவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு நாம் முதலில் நாம் செய்யும் முதலீடு குறிகிய கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா என்று முடிவுசெய்து கொள்ள வேண்டும்.  இதற்கு நாம் முதலில் தொழில் மற்றும் நடப்பு சந்தை தேவை அதாவது Market Gap என்ன வென்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  குறிகிய கால முதலீடு செய்வது என்றால் முதலில் பங்குச்சந்தையில் இடம் பெற்று இருக்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அந்த நிறுவனத்தின் எதிர்காலத்திட்டங்கள் தொழில் கொள்கை போன்றவற்றை தெரிந்து வைத்து பட்டியலிட வேண்டும்.  பின்பு அந்த பட்டியலை ஆராய்ந்து குறும்பட்டியல் அதாவது Short List  செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்தின் கொள்கை மற்றும் சந்தை மதிப்பு மற்றும் திட்டங்கள் பொறுத்து அதன் வளர்ச்சி விகிதம் அல்லது பங்குகளின் வளர்ச்சி விகிதம் மாறுபடும். இதில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் மற்றும் வளர்ச்சி கால அளவு பொறுத்து தேர்ந்துஎடுத்து முதலீடு செய்ய வேண்டும். குறிகிய கால முதலீடு என்பது பொதுவாக ஒன்றில் இருந்து மூன்று மாதம் கால அளவு. எந்தெந்த நிறுவனங்கள் இந்த குறிகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டி தருகிறதோ அந்த அந்த நிறுவனங்களை தேர்ந்துஎடுத்து செய்வது சரியான முதலீடு முறை.

அடுத்ததாக நாம பார்க்க போவது நீண்ட கால முதலீடு. இந்த நீண்ட கால முதலீட்டில் கால அளவு ஒன்பது மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை.  இது போன்ற முதலீட்டுகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நிறுவனங்கள் அல்ல துறைகள் தான்.  அடுத்த ஒன்றில் இருந்து மூன்று வருட காலத்தில் எந்தெந்த துறை அதிக வளர்ச்சி பெரும் என்று ஆராய்ந்து அந்த துறையில் சிறந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்.  நமது Blog இல் எதிர்காலத்தில் எந்தெந்த தொழில்கள் வளர்ச்சி பெரும் என்று பதிவு செய்து இருக்கிறோம்.  அதை பார்த்து அதில் முதலீடு செய்ய வேண்டும்.  உதாரணமாக எதிர்காலத்தில் EV’s அதாவது Electric Vehicles  களுக்கு அதிக சந்தை மதிப்பு மற்றும் விற்பனை இருக்கும்.  எனவே இந்த பங்குகள் அதிக லாபத்தை ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கலாம்.  துறையை தேர்ந்து செய்த பின்பு அந்த துறையில் உள்ள நிறுவனங்களை பட்டியலிட வேண்டும். பின்பு அந்த நிறுவனங்களின் சந்தை வளர்ச்சி அதாவது Growth Rate பொறுத்து நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்.  இவ்வாறு முதலீடு செய்தால் நமது முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும்.  எனினும் Risk Factor ஆராய்ந்து முதலீடு செய்வது சாமர்த்தியம்.

என்னங்க இன்றைய தகவல் பயனுள்ளதா இருந்ததா? இருந்தா உங்கள் கருத்தை பகிரவும்.  உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.  விருப்பப்பட்டால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.

நன்றி


Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...