Skip to main content

கோவையில் உள்ள பார்க்க வேண்டிய கோவில் தளங்கள்; Temples to visit in Coimbatore,

 


கோவையில் உள்ள பார்க்க வேண்டிய கோவில் தளங்கள்.

21st Century  நவீன உலகம் Culture Modern  என்று Busy ஆக இருக்கும் இந்த காலகட்டத்தில் சற்று இளைப்பாற மனதை புத்துணர்ச்சி ஆகி கொள்ள சிறிது ஓய்வு அல்லது பயணம் தேவை. Office வேலை என்று Busy  ஆனா Schedule லில் மனதுக்கு Relax  எங்கையாச்சும் வெளில போய்ட்டு வந்தா கொஞ்ச Comfort  இருக்குமே.  அப்படி பட்டவர்களுக்கு கோவையில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்

முதலில் கோவை என்றாலே நமது நினைவுக்கு வருவது பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தான்.  இந்த கோவில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழன் ஆல் கட்டப்பட்டது.  இங்கு சிவபெருமான் சுயம்புவாக தோன்றியதாகவும்பச்சைநாயகி உடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார்இந்த ஸ்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் ஆல் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.  இந்த கோயில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  பங்குனி உத்திர தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி ஆகும்.  இந்த கோவிலில் பட்டி விநாயகர் சிலை மிகவும் சிறப்புவாய்ந்தது.  அது மட்டும் அல்லாமல் சரஸ்வதி தேவி வீணையுடன் காட்சியளிப்பது இந்த கோவிலில்தான்.

இரண்டாவது முக்கிய கோவில் என்று பார்த்தால் மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் முருகப்பெருமான் மருதாச்சலமூர்த்தி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார் இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோவில் ஆகும். இது முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது இந்த கோவிலில் பாம்பாட்டி சித்தர் எனப்படுவருக்கு ஒரு சந்நிதியும்,  இந்த கோவிலில் முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தர்க்கு பாம்பு வடிவில் காட்சிஅளித்தாகவும் பின்பு வள்ளி தெய்வானை உடன் கட்சி அளித்து அருள் புரிந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் பாம்பாட்டி சித்தர் சந்நிதியில் இருந்து முருகப்பெருமான் சந்நிதிக்கு ஒரு ரகசிய குகை வழி ஒன்று இருந்ததாகவும் பாம்பாட்டி சித்தர் இந்த குகை வழியாய் சென்று முருகப் பெருமானை தரிசித்தாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது சிறப்பு பெற்ற கோவில் கோவை கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வர் கோவிலாகும்.  இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்டது ஆகும்.  இந்த ஸ்தலத்திற்கு என்று ஒரு புராண  கதை கூறப்படுகிறது.  அதாவது மார்க்கண்டேயன் என்பவருக்கு 16 வருஷம் தான் ஆயுள் காலம் ஆம் எனவே அவரது தந்தை மிகுந்து வருத்தம் அடைந்தாராம்.  இதை கவனித்த மார்க்கண்டேயன் அவரது தந்தையின் கவலையை நீக்க தனது ஆயுளின் கடைசி நாளன்று திருக்கடையூர் இல் உள்ள சிவன் சன்னதியில் தஞ்சம் அடைந்து, அங்குள்ள சிவ லிங்கத்தை பற்றிக்கொண்டார்.  இதை கண்ட எமன் மார்க்கண்டேயனை பிடித்து இழுத்து உள்ளார்.  இதனால் கோவம் அடைந்த சிவா பெருமான் எமனை சபித்து உள்ளார்.  தனது சாபத்தை போக்க எமராஜா கௌசிகா நதி கரையில் கோபத்துடன் தனது கையில் உள்ள கோளை வைத்து பூமியை பிளந்துள்ளார். அப்பொழுது அதில் இருந்து வெளி வந்த நீரில் சிறிது மண்ணையும் கலந்து எமராஜா சிவா லிங்கத்தை செய்து பூஜித்து பாவ விமோச்சனம் பெற்றாராம்.  பின்பு விஸ்வாமித்திர முனிவர் அந்த சிவலிங்கத்தை சுற்றி ஒரு சிறிய கோவில் எழுப்பி பூஜை செய்து வந்தார் என்றும் பின்பு நாளடைவில் அதையே இடத்தில சோழ மன்னரால் கோவில் எழுப்பப்பெற்றது என்று புராணம் கூறுகிறது.

அடுத்து கோவையில் உள்ள மிக முக்கியமான ஒரு ஸ்தலம் ஈஷா யோகா மையம் ஆகும்.  இது கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் சுமார் 30k m  தூரத்தில் வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.  இந்த மையத்தின் சிறப்பு இரண்டு விஷயம் ஆகும்.  ஒன்று இங்கு உள்ள பாதரச குளம் ஆகும். இந்த மையத்திற்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் முதலில் இந்த குளத்தில் நீராடிவிட்டு தான் செல்ல வேண்டுமாம். உடம்பில் காயங்களோ கீறல்களோ இருந்தால் இந்த குளத்தில் இறங்க அனுமதி இல்லை.  இந்த குளத்தில் நீராடினால் ஒரு வித Positive Energy கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.  இரண்டாவது இங்கு அமைந்து உள்ள Pyramid ஆகும்இந்த Pyramid  குள் அமர்ந்து தியானம் செய்வது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும்.

இந்த ஸ்தலத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் என்றல் இந்த ஸ்தலத்தின் முகப்பில் எழுப்பப்பெற்று உள்ள ஆதியோகி சிலை ஆகும்.  சிவராத்திரி அன்று இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  என்னங்க கோவை கு கிளம்ப தயார் ஆகிடீங்களா? இந்த இடங்களை Miss  பண்ணாம பாருங்க.  மேலும் இன்னும் பல இடங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்,  அதுவரை இணைந்து இருங்கள்.  உங்களுக்கு ஏதாயினும் சந்தேகம் உதவி என்றல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி

 

Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...