Skip to main content

பங்குச்சந்தையில் எப்படி லாபம் அடைவது? How to be profitable in Share Market?


பங்கு வர்த்தகத்தை பற்றி மேலும் விரிவான தகவல்கள். 

பங்கு வர்த்தகத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று Intra Day அதாவது குறிகிய கால முதலீடு அல்லது ஒரு நாள் முதலீடு.  இன்னோரு முறை Holdingஅதாவது நீண்ட கால முதலீடு. பங்கு சந்தை காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து 3.30 PM மணிக்கு முடிவு அடைகிறது.  பங்கு சந்தை தொடங்கிய உடனே பங்குகள் ஏறி இறங்க ஆரம்பிக்கும். அன்றைய அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப அதன் பங்குகள் ஏறி இறங்கி கொண்டு இருக்கும். உதாரணமாக இன்று DCB Bank என்னும் வங்கியின் பங்குகள் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால் அந்த நிறுவனம் தற்சமயத்தில், அதன் லாப நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது. அந்த கணக்கின் படி அதாவது P/L, Balance Sheet  ன் படி அந்த நிறுவனம் அதிக லாப ஈட்டும் நிறுவனம் அல்லது வங்கி என்று தெரிந்து கொள்ளலாம். அதன் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் ஆகும். இது ஒரு நல்ல லாபம் ஆகும்.  எனவே இந்த செய்தி வெளி ஆன உடனே அதன் பங்குகளின் மதிப்பு ஏறி கொன்டே இருக்கும், என் என்றால் முதலீட்டார்கள் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு அதிக மடங்கு லாபத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அதனால் இந்த செய்தி வெளி ஆன அடுத்த கணம் முதல் முதலீட்டர்களின் பார்வை இந்த பாங்கின் அதாவது DCB  பாங்கின் பக்கம் திரும்பி விடும்.  இதனால் இதன் பங்கின் விலை ஏறுமுகமாக இருக்கும்.  எனவே இப்பொழுது நாம் இந்த பங்கினை வாங்கினால் அதன் விலை ஏறுவது நிச்சயம். என் என்றல் அதிக முதலீட்டர்களின் கவனத்தினை ஈர்த்து இருக்கிறது. சரி பங்கின் விலை ஏறுமுகமாக இருக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.  நாம் இப்பொழுது அந்த பங்கினை வாங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் தொகைக்கு ஏற்றார்போல் அதன் அளவினை அல்லது எண்ணிக்கையை தீர்மானித்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது நாம் இதை வாங்கி விட்டோம். வாங்கும் முன்பு இன்னொன்றையும் நாம் தீர்மானிக்க வேண்டும். அதாவது இந்த பங்குகளை தினசரி  Intra Day அல்லது நீண்ட காலம் Holding என்று முடிவு செய்து தான் வாங்க வேண்டும்.  அப்படி நீங்கள் Intra Day தேர்வு செய்து வாங்கி இருந்தால் மாலை சந்தை Close ஆகும் வரை அந்த பங்கின் நிலவரத்தை பார்க்க வேண்டும். நாளில் ஏதோ ஒரு சமயத்தில் அந்த பங்கின் விலை அதிகமா செல்லலாம்.  அப்பொழுது பார்த்து அந்த பங்கை விற்று விட்டால் அன்றைய தினமே நமக்கு லாபம் கிடைத்து விடும். மாறாக நாம் Holding ஐ தேர்வு செய்து இருந்தால் கவலையை மறந்து விடலாம்.  அந்த நிறுவனம் அல்லது வங்கியின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் நமது பங்கின் மதிப்பும் ஏறி கொன்டே இருக்கும். நமக்கு தேவை படும் அன்று அன்றைய சந்தை நிலவரத்தை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்த விலையில் விற்று கொள்ளலாம்.  இவ்ளோ தாங்க.

சரி இன்று நாம் வாங்கிய DCB Bank ன் பங்குகள் ஏறுமா? அல்லது இறங்குமா?  என்ற உங்கள் கருத்தை Comment இல் சொல்லுங்கள். 

உங்களக்கு ஏதானும் கேள்விகள் சந்தேங்கங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

நன்றி 

Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...